இலங்கையில் நடைபெறும் உலக ஸ்கேட்டிங் போட்டிக்கு காங்கேயத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தேர்வு!!!

 

-MMH

 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த  செந்தமிழ்ச்செல்வன் கவிதா தம்பதியரின் குழந்தைகளான நேஹா மற்றும் தஸ்வின்  ஆகியோர் காங்கேயம் நகரில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் முறையே ஏழாவது மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர் இதேபோன்று செல்வ பாண்டி என்பவரது மகள் சமிதா ஸ்ரீ  மூன்றாம் வகுப்பிலும் பயின்று வருகின்றனர்.

இவர்கள் காங்கேயத்தில் உள்ள ராயல் ரைடர்ஸ் ஸ்கேட்டிங் அகாடமியில் கடந்த நான்கு வருடங்களாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர்.  இவர்கள் தங்களின் தனித்திறமையால் பயிற்சியாளரின் துணையோடு தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடக்கும் போட்டிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு அதில் பதக்கங்களும் பெற்றுள்ளனர். சிறந்த முறையில் பயிற்சி பெற்று வந்த இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றனர் இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற நேஷனல் செலக்சன் போட்டியில் பங்கேற்று அதிலும் வென்று  பிப்ரவரி 4ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று  அதிலும் வெற்றி பெற்று  வரும் 2024ம் ஆண்டு மே மாதம் இலங்கையில்  நடைபெறும் உலக ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா, கென்யா,  மாலத்தீவு,  பங்களாதேஷ்,  நேபால்,  உகாண்டா, இலங்கை  உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இவர்கள் தங்கள் தனித்திறமையால் இவர்கள் படிக்கும் பள்ளிக்கும் தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை தேடி தந்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியிலும் வென்று பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோமாக!!!

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை  மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments