வால்பாறை நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்களின் துயர நிலை!! கண்டுகொள்ளுமா அரசு!!!

 

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு அதாவது கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட காலத்தில் தூய்மை பணியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பணியாளர்கள் எனும் முறையில் பணி வழங்கப்பட்டு வந்தது. 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


தற்பொழுது இந்த பணியாளர்கள் காண்ட்ராக்ட் முறையில் பணி வழங்கப்படுவதால் அவர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இவர்களுக்கான ஊதியம் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக இந்த பணியாளர்கள் கூறுகின்றனர். நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவது போல் குறிப்பிட்ட காலத்தில் எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் எங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கான காப்பீடும் இல்லை. நகராட்சியில் தூய்மை பணியாளருக்காக ஒதுக்கப்படும்  வீடுகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர் . எனவே மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை ஏற்று எங்களுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments