கோவையில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி மற்றொருவருக்கு சிகிச்சை!!


கோவை சுங்கம், சிவராம் நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரலிங்கம், 37. இவர் சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி வைத்துள்ளார். 

நேற்று சவுரிபாளையத்தில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்காக மோகன சுந்தரலிங்கம் தனது ஊழியர்கள் ராமு, குணா ஆகியோரை அழைத்து சென்றார்.  

லாரியில் கழிவுகளை அப்புறப்படுத்தியபோது எதிர்பாராதவிதமாக குணா தவறி உள்ளே விழுந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மோகன சுந்தரலிங்கம், குணாவை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கிய போது, விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். ராமு உட்பட அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் மோகன சுந்தரலிங்கத்தை பரிசோதித்த டாக்டர், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். குணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.


Comments