வெற்றி வாகை சூடிய தமிழ்நாடு மாற்று திறனாளிகள்!!!

 

தமிழ்நாட்டை சார்ந்த 15 மாற்று திறனாளிகள் மத்திய பிரதேச மாநிலம் மோரோனா நகரில் நடைபெற்ற மட்டைப்பந்து  CRICKET போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் வெற்றி வாகை சூடி கோப்பையுடன் புது டெல்லியில் இருந்து சென்னைக்கு 05/0 2 /2024 இரவு தமிழ்நாடு அதிவிரைவு தொடர் வண்டியில் மாற்று திறனாளிகள் பெட்டியில் பயணம் மேற்கொண்டனர்.

அவர்களுடன்  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் முக்கிய புள்ளியான சுவாமி மலை சுந்தர விமல் நாதன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த காந்தியவாதி திரு செல்வராஜ் ஐயா அவர்களும் பயணித்தனர்.

அதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த முதுகுத்தண்டுவட பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக சக்கர நாற்காலியில் மட்டுமே அமர்ந்து மட்டைப்பந்து போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவருடன் இரண்டு நாட்கள் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்தனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சகோதரர்கள் அனைவருக்கும் தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அடுத்து வருகின்ற ஏப்ரல் 4, 5, 6 ஆகிய நாட்களில்  தமிழ்நாடு,தெலுங்கானா, ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களுக்கிடையான SOUTH ZONE மாற்றுத்திறனாளிகளுக்கான மட்டைப்பந்து போட்டி SOUTH ZONE தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சையில் நடைபெற இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் அந்த தோழர்கள் தெரிவித்துள்ளனர்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-தஞ்சாவூர் பாலமுருகன்.

Comments