அரசு மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியக்கூடிய அதிநவீன பெட் சி.டி. ஸ்கேன் செயல்பாடு!!

 

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியக்கூடிய அதிநவீன பெட் சி.டி. ஸ்கேன் செயல்பாடு திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாட்டில் 2 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியக்கூடிய பெட் சிடி ஸ்கேன் என்கிற அதிநவீன கருவி இருந்தது. இக்கருவியை இன்னும் 5 இடங்களில் அமைக்க வேண்டும் என  கூறினாா்.

 தற்போது, தஞ்சாவூரில் இக்கருவி அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப் பட்டுள்ளது. இந்தக் கருவி மூலம் துல்லியமாக புற்றுநோயை அறிவதற்காக தனியாா் மருத்துவமனைக்குச் சென்றால் ரூ. 25 ஆயிரம் செலவாகும். இதை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்திதான் இப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், ரூ. 11 ஆயிரம் தான் செலவு ஏற்படும். இதன் மூலம், திருவாரூா், மயிலாடுதுறை, பெரம்பலூா், கடலூா் உள்பட 8 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவா். அடுத்து, சேலம், கோவை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பெட் சிடி ஸ்கேன் அமைக்கும் பணி முடித்து திறந்து வைக்கப்படும். இதுபோல, இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் இக்கருவி இல்லை.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 46 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில், ரூ. 42 கோடியில் கட்டடங்களும், ரூ. 4 கோடியில் உபகரணங்களும் அமைக்கப்படவுள்ளன. 

முன்னதாக, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் வரவேற்றாா். நிறைவாக, மருத்துவக் கண்காணிப்பாளா் ஆா். ராமசாமி நன்றி கூறினாா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-பாலமுருகன், தஞ்சாவூர்.

Comments