தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி தொடர் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது!!


தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி தொடர் நடைபயணம் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்களின் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக இன்று கைவினைப் பொருள் பாரம்பரிய நடைபயணம்‌ தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வீணை தயாரிப்பு கூட்டுறவு சங்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தஞ்சாவூர் நாணயக்கார செட்டி தெருவில் வசிக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர் திரு. செல்வராஜ், ஜவுளி செட்டி தெருவில் வசிக்கும் தஞ்சாவூர் அலங்கார தேர் கலைஞர் திரு. செந்தில்குமார், தெற்கு வீதியில் வசிக்கும் கண்ணாடி கலைப்பொருட்கள் கலைஞர் திரு. செல்வராஜ், காசு கடை தெரு பொற்கொல்லர்கள்,  மானோஜிப்பா வீதியில் வசிக்கும் நகை அச்சு கலைஞர் திரு. சீனிவாசன், கீழ வீதியில் வசிக்கும் தஞ்சாவூர் ஓவிய கலைஞர் திரு. சம்பாஜி ராஜா போன்சிலே மற்றும் வீணை தயாரிப்பு கலைஞர் திரு. சின்னப்பா ஆகியோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கலைப் பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

பாரம்பரிய நடை பயணத்தினை தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக மேனாள் காப்பாளர் முனைவர். பெருமாள் வழி நடத்தினார். இதில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார், உதவி சுற்றுலா அலுவலர் திரு. வரதராஜன், இன்டாக் பாரம்பரிய சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. சுவாமிநாதன், கலை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இந்த நடை பயணம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பயனுள்ள வகையில் இருந்ததாக அனைவரும் தெரிவித்தனர்.              

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-பாலமுருகன் தஞ்சாவூர்.

Comments