கண்காணிப்பு கேமரா அறை திறப்பு விழா!!

கோவை மாநகர் டி4 குனியமுத்தூர் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா அறை திறப்பு விழா.

கோவை மாநகர் குனியமுத்தூர் இடையர் பாளையம் பிரிவு  பகுதியில் புதியதாக கண்காணிப்பு கேமரா அறை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் திறப்புவிழா கோவை மாநகரகாவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 825 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது குனியமுத்தூர் இடையர் பாளையம் பிரிவு மற்றும்  குனியமுத்தூர் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதியதாக 30கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்று குனியமுத்தூர் காவல்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பகுதி வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் இந்த பகுதிகளில் புதியதாக 30கேமராககள் வைக்கப்பட்டுள்ளது.....

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணன் உதவி ஆணையர் ரகுபதி ராஜா குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வி.மணிவண்ணன் , காவல் ஆய்வாளர் பாஸ்கரன் காவல்நிலைய  உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், மற்றும் தலைமை காவலர் முத்துசாமி மற்றும் சமூக ஆர்வலர் டிஸ்கோ காஜா பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை காவலர் முத்துசாமி செய்திருந்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments