பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அதிகளவில் உட்கொண்ட பள்ளி மாணவி திடீர் சாவு…!!!

கோவை: பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை அதிகளவில் உட்கொண்ட பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர்  ராஜாமணி(35). இவரது மனைவி புவனேஸ்வரி(31). இவர்களது 6 வயது மகள் தியாஸ்ரீ. சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். 

மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் சத்து மாத்திரை கொடுத்துள்ளனர். இதனை அந்த குழந்தை தனது புத்தகப்பையில் வைத்து விட்டு அவ்வப்போது மிட்டாய் என நினைத்து உட்கொண்டு வந்ததாக தெரிகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாணவிக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்று போக்கில் வெளியேறிய மாத்திரையை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையின் புத்தகப்பையில் சோதனை செய்தபோது அதில் ஏராளமான சத்து மாத்திரைகள் இருந்ததாக தெரிந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக அளவில் சத்து மாத்திரையை உட்கொண்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments