மீனாட்சிபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், மழைக்காலங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு தெருக்களில் முறையான சாலை அமைத்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்வில் செயற்பொறியாளர் செல்வஜோதி, ஜமீன்செங்கல்படை ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன்,  மீனாட்சிபுரம் அதிமுக நிர்வாகிகள் பாண்டி, கந்தன், மரகதவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments