புதியம்புத்தூரில் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் 100% வாக்களிக்க வலியுறுத்தி HNUP பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி.!!!


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  HNUP பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகத்தில்  19ஆம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே புதியபுத்தூர் HNUP பள்ளி சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்று ரோலர் ஸ்கேட்டிங் மூலம் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி  விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியை ஓட்டப்பிடாரம் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார்  இருந்து தொடங்கி வைத்தார் .  நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உமா காசிதங்கம் பள்ளி கல்வி குழு தலைவர் தங்கராஜ் உறவின்முறை தலைவர் முத்துராஜா செயலாளர் ராஜா பொருளாளர் தர்மராஜா இணை செயலாளர் சௌந்தர பாண்டியன் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாராமன் கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக் ராஜம்மாள் நகர் பாலமுருகன் டேவிட் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments