ஓட்டு கேட்டு வரும் கனிமொழியிடம் என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் எட்டையபுரம் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா கடும் விமர்சனம்.!!!!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நடிகையும் அதிமுக மாநில பேச்சாளரும் விந்தியா நேற்று விளாத்திகுளம் தொகுதி எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோயில் முன்பு திறந்தவெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மற்றும் சிறப்பு வரவேற்பைப் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் செய்துள்ளார் .

நடிகை விந்தியா பொதுமக்களிடம் பேசியதாவது :

தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகள் ஒன்றும் செய்யாமல் மீண்டும் பதவி ஆசையில் போட்டியிடுகிறார் 

ஓட்டு கேட்டு வரும் கனிமொழியிடம் என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்... ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை, கேஸ் விலை குறைப்பு, மதுவிலக்கு பற்றி கேளுங்க, 

நீங்க திமுகவுக்கு ஓட்டு போடுறதும்  குரங்குக்கு கோர்ட் போடுறதும் ஒன்னுதான்... சுத்த வேஸ்ட் உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய திருடனை கூட நம்பலாம் ஆனால் திமுக காரணை நம்பக்கூடாது திமுக ஒருவேளை ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தால்... திமுக 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுத்தால் சிலிண்டர் இருக்கும் ஆனா உள்ள கேஸ் இருக்காது,திமுக தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு பேசுவாங்க தேர்தலுக்கு பின்னாடி ஒன்னு பேசுவாங்க திமுக தேர்தல் சமயத்தில் ஓட்டை பத்தி மட்டுமே கவலைப்படுவாங்க  தேர்தல் முடிந்தவுடன் வீட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள் என பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் மற்றும் கோபி என்ற அழகிரி காந்தி என்ற காமாட்சி உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments