காட்டு மாடு தாக்கி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள பாரளை எஸ்டிடி பணிபுரியும் சுரேஷ்குமார் வயது 50 தகப்பனார் பெயர் சின்னப்பராஜ் அவர் நேற்று மாலை 6:30 மணி அளவில் எஸ்டேட்டிலிருந்து வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது எதிர்பாராமல் காட்டில் உள்ளே பதுங்கி இருந்த காட்டுமாடு ஒன்று அவரை தாக்கியது. அக்கம் பக்கத்தினர்கள் அவரை வால்பாறை அரசு மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

வால்பாறை பகுதிகளில் காட்டு மாடுகள் அதிக அளவு உலா வருகிறது. கடந்த வாரம் இதேபோல் கட்டு மாடு தாக்கி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் கவனமாக வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து 

-திவ்யகுமார். 

Comments