மனித ரத்தத்தையும் மனித உடலையும் வேட்டையாடும் வனவிலங்கு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை அடுத்துள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் பெற்றோர் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது குழந்தையை வீட்டின் அருகாமையில் உள்ள செடி புதர்களுக்குள்ளே பதுங்கியிருந்த சிறுத்தை மின்னல் வேகத்தில் குழந்தையை கவ்வி சென்றது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது பெற்றோர் முன்பாக நடந்தது. அழல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏதோ சத்தம் கேட்கிறது என்று எட்டிப் பார்த்து உள்ளது. பெற்றோர் குழந்தையை ஏதோ விலங்கு கவ்வி சென்றது என கூறினர். பின்பு அக்கம் பக்கத்தினர் புதர்களிலும் தேயிலைச் செடிகளின் உள்ளே தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. வனவிலங்கு அதிகாரிகள் தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விரைந்து வந்தும் இரவு பகலாக கிடைக்காமல் இன்று காலை 11 மணி அளவில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பின்பு அது அடர்ந்த சோலை காட்டுப் பகுதியில் பச்சை மலை சுடுகாடு பகுதியில் மேலே காட்டுக்குள் மோப்பநாய் சென்றது. அங்கு சிறுமி சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. 

உடனே வனவிலங்கு அதிகாரிகள் அந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இது போன்று அடிக்கடி குழந்தைகளை குறி வைத்து வனவிலங்குகள் வருமா என்கிற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments