சரிவர வேலையை முடிக்காமல் சாலை ஓரங்களில் வாகன விபத்துக்கள்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை கண்டித்து சென்ற ஆட்சியில் குடிநீர் டெண்டர் விடப்பட்டது. இந்த ஐந்து வருட காலமாக இதுவரை அந்த குடிநீர் குழாய் பதிப்பு குடிநீர் வினியோகம் மக்களிடையே வந்து சேரவில்லை. இதனால் வால்பாறை வட்டார பகுதிகளில் இன்னும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டு இதுவரை ஐந்து ஆண்டு காலமாக பணி நிறைவேறவில்லை. எப்பொழுதுதான் பொது மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
இந்த குடிநீர் பைப்பு குழாய்கள் சாலையோரங்களில் மூடாமல் அதிக அளவு அரசு பஸ் மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துக் குள்ளாகிறார்கள். இதனைக் கண்டாவது குடிநீர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் கலந்தாய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா...? எப்பொழுதுதான் குடிநீர் பிரச்சனை தீரும்..?
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments