தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் குறை தீர்க்கும் முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது...

 

ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமை காவலர்கள் முதல் காவலர்கள் வரை உள்ள 24 காவல்துறையினர் தங்கள் குறைகள் மீதான மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுமீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர்

-பரணி பாலா.

Comments