மூளை தின்னும் அமீபா-கோவையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு!!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொது சுகாதார இயக்குனர் A. சோமசுந்தரம், "இந்த தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவது இல்லை. இது தொற்று நோய் கிடையாது. அதனால், மக்கள் முகமூடி அணிய தேவையில்லை. எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கவும் தேவையில்லை. ஆனால், நீச்சல் குளங்களை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறினார். மேலும், மக்கள் அழுக்கான மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீச்சல் குளங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் P. பாலுசாமி, சுகாதார ஆய்வாளர்களுக்கு நீச்சல் குளங்கள் மற்றும் நீர் விளையாட்டு பூங்காக்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். சுகாதார ஆய்வாளர்கள் இந்த வசதிகளை கண்காணிப்பார்கள்.
PAM எனப்படும் மூளையை உண்ணும் அமீபா தொற்று, நெக்லேரியா ஃபௌலேரி என்ற அமீபாவால் ஏற்படுகிறது. இந்த அமீபா தேங்கி நிற்கும் நன்னீர், குளம், குட்டை மற்றும் சரியாக சுத்தம் செய்யப்படாத நீச்சல் குளங்களில் வாழும்.
கடந்த ஆண்டு, கேரளாவில் இந்த தொற்று பரவியதை அடுத்து, மருத்துவர்கள் PAM தொற்றுக்கான அறிகுறிகளை கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விறைப்பு, பிரமை, குழப்பம் மற்றும் வலிப்பு ஆகியவை PAM தொற்றின் அறிகுறிகளாகும்.
விழிப்புடன் இருப்போம்!
வரும்முன்
காப்போம்!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments