கனிமொழிக்கு பெரியார் விருது - மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நேரில் வாழ்த்து!!


திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அறிஞர் அண்ணா (செப் 15), பெரியார் (செப் 17) பிறந்த தினம், திமுக தொடங்கப்பட்ட தினம் (செப் 17) ஆகியவற்றை ஒருசேர கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனைப்படி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கனிமொழி கருணாநிதி அவர்களை அவர்களது இல்லத்திற்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இத்துடன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கழுகுமலை அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி வகைகள் செய்ய வேண்டும் என்று மனுவினை அளித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர் 

- ராஜ்குமார்.

Comments