நகராட்சி கடைகளை அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றுப் பகுதியில் நடைபாதை கடைகள் அமைத்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



அப்பகுதியில் நகராட்சிக்கு எந்த ஒரு வருமானம் இல்லாமல் இருக்கின்றது. தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்ற அப்பகுதியில் நகராட்சி கடைகள் அமைத்து தரவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கூறி வருகின்றனர். 

அப்பகுதியில் பொருட்களை வாங்கி பானங்கள் அருந்திவிட்டு கழிவு பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது, காட்டு விலங்குகள் உட்கொள்கிறது,தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. இதனைக் கண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை சொல்லி வருகின்றனர்.

பொருட்களுக்கு அதிக அளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூறி செல்கின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments