மின் விளக்கு இருந்தும் பயனில்லை பொதுமக்கள் அவதி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள காந்தி சிலை அருகாமையில் ஸ்டேட்மெண்ட் சந்திப்பு, சுப்பிரமணி சாமி திருக்கோவில் வளாகம், மார்க்கெட் பகுதி, புதிய பேருந்து நிலையம் இப்பகுதிகளில் அதிக அளவு உயர் மின் கோபுர விளக்கு இருந்தும் எரிவதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பலமுறை நகராட்சி ஆய்வாளர் ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிகளவு நடமாட்டம் உள்ளது. இதனை கண்காணிக்கக் கூடிய உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் இப்பகுதிகளில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே இப்பகுதி தெரு விளக்குகளை எரிய வைத்தால் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் தவிர்க்கலாம் என இப்பகுதி மக்கள், வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் கூறிவருகின்றனர்.இந்த செய்தியைக் கண்டாவது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்விக் குரியாகவும் உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments