மின் கம்பியில் சிக்கி விவசாயி பலி!!

கயத்தாறு அருகே மின் கம்பியில் சிக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் ஊரைச் சேர்ந்த விவசாயி வடிவேல் கோனார் என்பவர் காட்டு பன்றிகளிடமிருந்து மக்காச்சோள பயிர்களை காப்பாற்ற தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து வடிவேலுவின் வீட்டிற்கு நேரில் சென்று வடிவேலுவின் மனைவி சுப்புத்தாய் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறியதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் கயத்தாறு பகுதி ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் கருமாரி அம்மாள், தூத்துக்குடி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் வீரபெருமாள், திமுக கிளை பொறுப்பாளர்கள் முருகன், சந்திரன், சுமதி, நாகூர் கனி,  ராஜாபுதுக்குடி பால்ராஜ், சதிஷ், தொழிலதிபர் ஐயாசாமி உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராஜ்குமார், கோவில்பட்டி.

Comments