ஒயின் பாட்டிலில் காந்தி படம்

ஸ்ரேல் நாட்டு ஒயின் பாட்டிலில் காந்தி படத்தால் சர்ச்சை புதுடில்லி: இஸ்ரேல் நாட்டு ஒயின் பாட்டிலில் காந்தி படம் இடம்பெற்றதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் மக்கா பிரேவரி என்ற மதுபானம் நிறுவனம் தனது ஒயின் பாட்டிலில் தேசதந்தை மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டுள்ளது. அதில் காந்தி கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்தும், கூலிங் கிளாசுடனும் இருப்பது போன்று உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து கேரளாவில் செயல்பட்டு வரும் காந்தி தேசிய அறக்கட்டளை தலைவர் இபி.ஏ. ஜோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுத்து சர்ச்சைக்குரிய படத்தை நீக்க இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என கூறினார். வேண்டும் என கூறினார். இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் பூஜ்ஜிய நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சர்ச்சை படம் குறித்து கேள்வியெழுப்பி பேசினார். அவர் பேசியது, , நமது தேசப்பிதாவை கேவலப்படுத்தும் விதமாக படம் வெளியிட்ட அந்த நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் பிரதமரை , பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். மேலும் சர்ச்சை மது பாட்டில்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Comments