பொள்ளாச்சியில் பயங்கரம் "மயங்கும் குழந்தைகள்"?

பொள்ளாச்சி மயங்கும் குழந்தைகள்?


திவான்சாபுதூர் ஊராட்சி உட்பட்ட மினாட்சிபுரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சிமில் ஒன்று இயங்கி வருகிறது இந்த மில்லில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 18/07/2019 ம் தேதியன்று மஞ்சிமில்லில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த மஞ்சிமில்லிற்கு மிக மிக அருகில் சுமார் 500 மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் லட்சுமி வித்யாபவன் என்கிற தனியார் பள்ளியும். 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். தீ விபத்தினால் பள்ளி பகுதி முழுவதும் மற்றும் குடும்பங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் மஞ்சிதுகள் கலந்து புகை சூழ்ந்து கொண்டது. அதனால் பள்ளியில் உள்ள மாணவர்கள் குழந்தைகள் ஆசிரியர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிப்பட்டு உள்ளர்கள் உயிர் சேதம் தவர்க்கப்பட்டது இந்த மஞ்சிமில்லில் ஏற்படும் மஞ்சி தூசி கழிவுநீர் மற்றும் கழிவுகள் ஆகியவை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் தொந்தரவாகவும் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.. ) இந்த நிலையில் இந்த பகுதியில் வழ மக்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் அச்சம் மாக உள்ளது.. மஞ்சி மல்லின் கழிவு நீரை பூமிக்கடியில் நேரடியாக செலுத்திகின்றனர் இதனால் நிலத்தடி நீர் மாசு பட்டு அருகில் உள்ள வீடுகளில் ஆழ்துளை கிணற்றில் வரும் நீர் மாசு பட்டு வருகிறது... இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் இந்த விபரங்களை உயிர் திரு மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது வரை எந்த விதமான நடவடிக்கை எடுக்க வில்லை என்பது வருத்தமன செய்தி.


- பொள்ளாச்சி நிருபர் M.சுரேஷ் குமார்


Comments