இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணிபுரிந்து வந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் மருத்துவர் கடந்த புதன்கிழமை அன்று காணாமல் போயுள்ளார். அதனை தொடர்ந்து, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பிரியங்காவின் பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரி சம்ஷாபாத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எப்போதும் பணிகளை முடித்துவிட்டு வீடு வந்து சேரும் அவர் அன்றைய தினம் மற்றும் இரவு பத்தரை மணிக்கு மேலாகும் வீடு திரும்பவில்லை . ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான லாரி டிரைவர் ஒருவர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம் போலீசாரை அதிர செய்தது ஐதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் கால்நடை டாக்டர் நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவருடைய இரு சக்கர வாகனம் திடீரென பழுதானது. இதனை அடுத்து அவர் தனது தங்கைக்கு மொபைல் மூலம் தகவல் கொடுத்த நிலையில், திடீரென அவரது மொபைல் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அவருடைய பிணம் எரிந்த நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோவில் அடிப்படையில் லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து லாரி டிரைவர்ரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரே திடுக்கிட வைத்தது இருசக்கர வாகனம் பழுதானதால் சாலையில் அப்பாவியாக நின்று கொண்டிருந்த டாக்டர் பிரியங்கா ரெட்டிக்கு உதவுவதுபோல் நடித்ததாகவும் அதனை அவர் நம்பிய போது திடீரென அவரை தூக்கிக் கொண்டு மறைவான இடத்திற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் இந்த குற்றத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் மட்டும் இல்லாமல் மேலும் இருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளதை அடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்னொரு கடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்சபள்ளி சுங்கச்சாவடி அருகே வந்து இருக்கிறார். எப்போதும் அங்கிருந்து அரசு பேருந்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழக்கமாக இருந்த அவரை எப்படியாவது தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் டயரை பஞ்சர் ஆக்கி உள்ளனர். பிரியங்காவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவர்கள் இரவு ஒன்பது இருபது மணிக்கு சுங்கச்சாவடி வந்த போது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வண்டி பஞ்சர் ஆகி இருப்பதால் அதனை தள்ளிக்கொண்டு செல்ல முற்பட்டார் அப்போது வந்த லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கிளீனர் சிவா இருவரும் பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று அங்கே சின்ன கேசவலு,நவீன ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர் என காவல் ஆணையர் சஞ்சனர் தெரிவித்தார். பின்னர் அவரது உடலை தார்ப்பாய் சுற்றிய லாரியில் போட்டு கொண்டு கட்டபள்ளி என்ற பகுதியின் அருகே சென்று பாலத்தின் அடியில் பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர் என ஐதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஒரே நாளில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் பிடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


  MMH.                                                                                                                -L.THRUMAL


Comments