வெறுக்கத்தக்க கருத்துக்கள் பா.ஜ.கவில் இருந்து விலகிய


சுபத்ரா முகர்ஜி


டெல்லி வன்முறை சம்பவத்தில் பாஜக தலைவர்கள் பேச்சைக் கண்டித்து அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார் நடிகை சுபத்ரா முகர்ஜி. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் சுமார் 40 பேர் வரை கொல்லப்பட்டனர். ஒரு காவலர் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவரும் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.


இது தொடர்பாக போலீஸார் 200-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வன்முறை தொடங்குவதற்கு முன்னதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அன்ராக் தாகூர் போன்ற தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதர் உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில், கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார் மேற்கு வங்க நடிகை சுபத்ரா முகர்ஜி. மேற்குவங்கத்தில் டிவி சீரியல் நடிகையாக வலம் வரும் சுபத்ரா, கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுக்கத்தக்க கருத்துகளைக் கூறியுள்ளனர். இருந்தும் தற்போது வரை அவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தான் விலகியதற்கான காரணத்தை சுபத்ரா தெரிவித்துள்ளார்.                -MMH


Comments