புலிகளை வேட்டையாடும் வேட்டை கும்பல்

-MMH


           கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் போத்தமடை பீட் பகுதியில் 2 புலிகள் கடந்த 9ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தன இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் 2 புலிகளின் உடற்கூறு ஆய்வில் காட்டுப்பன்றிக்கு விஷம் வைத்து காட்டுப்பன்றியை புலிகள் சாப்பிடும் படி வைத்து 2 புலிகளை வேட்டையாட மர்ம கும்பல் செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் விசாரணை மேலும் தீவிரமானது.



   விசாரணையில் முதற்கட்டமாக ராசு கருப்புச்சாமி என்ற இருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் அதில் தொடர்புடையவர்களை தேடிவந்த நிலையில் ஆனைமலை சேத்துமடை பகுதியில் பதுங்கியிருந்த வெள்ளிங்கிரி முருகன் என்ற இருவரை வனத்துறையினர் கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளது  வனத்துறை.


இதில்  தொடர்புடையவர்களை விசாரித்து வருகின்றனர்  வனத்துறை இந்நிலையில் புலிகளுக்கு விஷம் வைக்க தூண்டி விட்ட நில உரிமையாளர்களை கைது செய்ய கால தாமதம் செய்வது ஏன் என்ற முதல் கேள்வியும்..? அடிக்கடி வன விலங்குகளை சர்வ சாதாரணமாக வனத்துக்குள் சென்று பல பேர் வேட்டையாடி வருகிறார்கள் வன அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்தும் இது போன்ற சமூக விரோத செயல்கள் எவ்வாறு நடைபெறுகிறது இதில் வனத்துறையினருக்கும் சம்பந்தம் உண்டா என்ற இரண்டாம் கேள்வியும் நிலவுகிறது இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாரபட்சமின்றி விரைவில் கைது செய்து வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் பதிவாக உள்ளது.


-M.சுரேஷ்குமார்,பொள்ளாச்சி.


Comments