பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் உதவிகள்

       -MMH


         கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை வட்டாரத்தில் புதுப்பதி மற்றும் சின்னாம்பதி மலைகிராமங்களில் கொரோனா வைரஸ் (Covid-19) நோய் தொற்றின் காரனமாக வெளியே வரமுடியாத இடங்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மதிய உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் E.N.நந்தகுமார்.G.A.கண்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.உடன் எட்டிமடை நகர தலைவர் தெண்டபாணி.ரத்தினகுமார் ராஜசேகர். ராஜ்குமார். சதீஷ் சரண். ஒக்கிலிபாளையம் பழனிசாமி ஜான் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியமக்களுக்கு இதுபோன்ற உதவிகள் காங்கிரஸ்ஸார்  செய்து வருகிறார்கள். 



Comments