இன்று யோகா தினம்!!

        -MMH


உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014 ம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.


அதை முன்னிட்டு இன்று யோகா தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக இன்று கேரளா மாநிலம் சித்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெருமாட்டி கிராம பஞ்சாயத்தில் சதீஷ் வீட்டில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது சனோஜ் யோகா பயிற்சி சொல்லிக்கொடுக்க அங்கு கூடியிருந்த அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.


மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானம் பெரிதும் உதவுகின்றன என்ற சிந்தனையோடு,


-பொள்ளாச்சி M.சுரேஷ்குமார்.


Comments