திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளும் பாதாள சாக்கடை பணிகள் !பொள்ளாச்சி மக்கள் புலம்பல் !!

-MMH


     கோவை,பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது முறையான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளும் பணியால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.


     இந்நிலையில் வெங்கட்ராமன் வீதியில் பாதாள சாக்கடை பணிக்காக திடீரென ரோடு தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை மேலும் தடுப்பும் வைக்கப்படவில்லை. பொள்ளாச்சி சாலையில் மிகவும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது வெங்கட்ராமன் வீதி இந்த சாலையின் வழியாக அரசு மருத்துவமனை, கடை வீதி, என மக்கள் அனுதினமும் பயணிக்கும் முக்கிய சாலை ஆகும்



     எந்த முன்னறிவிப்புமின்றி பாதாள சாக்கடை தோண்டியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் முறையான மாற்றுப் பாதையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


M.சுரேஷ்குமார், பொள்ளாச்சி.


Comments