அ தி முகாவில் குறிச்சி பகுதி நிர்வாகிகள் மாற்றம் !!

     -MMH


         தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதை கருத்தில் கொண்டு அதிமுகவில் நிர்வாகிகள் மாற்றம்! கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அதன்படி இதுவரை குறிச்சி பகுதி ஏழு வார்டுகள் மட்டுமே இருந்தன. புதிதாக 85 என்ற வார்டு இணைக்கப்பட்டது.


        இதுவரை ஏழு வார்டுகளாக இருந்த குறிச்சி பகுதியில் திரு பெருமாள் சாமி அவர்கள் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது. 85, 95, 99, மற்றும் 100,வது வார்டு களுடன் போத்தனூர் பகுதி உருவாக்கப்பட்டு அந்த பகுதிக்கு 99வது டிவிசன் செயலாளராக இருந்த A. ரஃபீக் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . 



        அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் 2 மணி அளவில் கோவை மாவட்டம் அ தி மு க தலைமை கழகதில் மாண்புமிகு அமைச்சர் திரு. எஸ் பி வேலுமணி அவர்களை நேரில் சென்ற பகுதி செயலாளர் A ரஃபீக் அவர்கள், சிறுபான்மை மாவட்டத் துணைத் தலைவர் - சுறா, அவர்கள் மற்றும் கட்சி சார்ந்த மயில்சாமி , குச்சி பாலன், ஏ கே வி செந்தில், கே எஸ் மோகன், வேன் நாகராஜ் , ஐயப்பன், சதீஷ், பன்னீர், கேபிள் ஜான், இன்ஜினியர் பாபு , ஆகியவர்கள் பங்கேற்றனர் .அங்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர் .


       இதுகுறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போத்தனூர் பகுதி செயலாளர் A.ரஃபிக் அவர்கள் கூறுகையில் நான் கட்சியில் கடந்த 32 ஆண்டுகாலமாக தொண்டராய் பணியாற்றிவருகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து எங்களுடைய பாசமிகு அண்ணன் திரு அமைச்சர் SP.வேலுமணி அவர்கள் இந்த பதவியை வழங்கியுள்ளார். வரும் சட்டமன்ற பொது தேர்தலில் அதி மு க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க அயராது பாடுபடுவேன் என்று கூறினார்.


-ஈஷா,குறிச்சி, கோவை.


Comments