கோவை-ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

          -MMH


தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது.



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


-அருண்குமார்,கோவை மேற்கு. 


Comments