ஆதார் கார்டு கொடுக்கும் பணி தொடக்கம்-மக்கள் மகிழ்ச்சி.!

          -MMH


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் தபால் நிலையங்களில் ஆதார் கார்டு பணியை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி கோட்ட தபால் நிலையங்களில் மக்களின் நலனில் கருத்தில்கொண்டு ஆதார் கார்டு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



ஆதார் பதிவுக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை மேலும் போட்டோ மாற்றுதல், கை ரேகை, கண் விழி புதுப்பித்தல் சேவைகளுக்கு ரூபாய் 100 மற்றும் பெயர் முகவரி பிறந்த தேதி மொபைல் எண் மாற்றுவதற்கு ரூபாய் 50 கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என பொள்ளாச்சி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


நாளைய வரலாறு செய்திக்காக பொள்ளாச்சியிலிருந்து,


-M.சுரேஷ்குமார்.


Comments