ஹலோ!நான் சரத்குமார் பேசுகிறேன் -மர்மஆசாமிக்கு வலை வீசல்!!

       -MMH


     தமிழகத்தில் முக்கிய தலைவர்களுக்கு மற்றும் விஐபிக்களுக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் போன் செய்து வந்துள்ளார். சரத்குமார் ஏன் நமக்கு போன் செய்ய வேண்டும் என்று அனைவருமே குழப்பத்தில் இருந்த நிலையில் இதை பற்றி சரத்குமாரிடமே கேட்டு விட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சரத்குமார் நான் போன் பண்ணலையே என்று மறுத்து வந்துள்ளார்.



என்று மறுத்து வந்துள்ளார் இதனால் பெரிய சந்தேகமும் சரத்குமாருக்கு எழுந்தது. அப்போதுதான் அந்த மர்மநபர் சரத்குமாருக்கே போன் செய்துள்ளார் இதனால் உஷாராகிவிட்ட சரத்குமார் நைஸாக அந்த மர்ம நபரிடம் பேசி விசாரித்துள்ளார் .விசாரணையில் கோவையை சேர்ந்த அசோக் என்பதும் சாப்ட்வேட் என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது. விஷயத்தை அவரிடம் கறந்த பிறகுதான் சரத்குமார் என் குரலில் நீங்க எப்படி பேசலாம் என்று கண்டித்துள்ளார்.


இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார் என்னுடைய செல்போன் நம்பரை போலியாக உருவாக்கி அந்த நம்பர் மூலம் பிறருக்கு போன் செய்து மோசடி செய்த கோவையை சேர்ந்த அசோக் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த புகார் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது இந்நிலையில் ஒருவருடைய போன் நம்பரை இன்னொருவர் எப்படி பயன்படுத்த முடியும் என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு அழிவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.


நாளைய வரலாறு செய்திக்காக நிருபர் குழுவுடன்,


-M.சுரேஷ்குமார்.


Comments