மத்திய அரசின் தங்க பத்திர வெளியீடு!- இன்று துவக்கம் !!

    -MMH


     நடப்பு நிதியாண்டுக்கான,மத்திய அரசின் ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு,இன்று (ஆக .,31) துவங்குகிறது. இந்த ஆறாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,117 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் கடைசி நாள் செப்டம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.


     பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியை கொண்டு, வெளியீடு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில்,  வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


     கிரெடிட், டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 5,067 ரூபாய்க்கு கிடைக்கும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். ஒரு கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments