கோவை குறிச்சி குளத்தில் திடீர் பரபரப்பு..!

 


 



                                                                                                                                                             -MMH 


      இன்று கோவை குறிச்சி குளத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறை இனைந்து,குளத்தில் தவறி விழும் நபர்களை எப்படி இலகுவாக காப்பாற்றுவது என்ற ஒத்திகை நடத்திக்காட்டினார்கள்.



       தீயணைப்பு வீரர்கள் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகளும்,பொதுமக்களும் ஏதோ ஒரு விபத்து நடந்து விட்டது அதனால்தான் இத்தனை அதிகாரிகளும் முழுவீச்சில் ஏதோ தேடுகிறார்கள் என்று நினைத்தார்கள். அதனால் சிறிதுநேரம் அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது.பிறகு உண்மையை தெரிந்த உடன் நிம்மதி அடைந்த மக்கள் தீயணைப்பு மற்றும் காவல் துறையை வெகுவாக பாராட்டினார்கள்.


-ஈஷா ,கிரி .


Comments