அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்கும் சென்னை புறநகர் ரயில்கள் சேவை!!

      -MMH


          அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


           கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் அக்டோபர் 7-ஆம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.



          புறநகர் இரயில் சேவையில் பணியாற்றும் 100% பணியாளர்களை 1-ஆம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தல் செய்துள்ளனர். மேலும் 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-v.ருக்மாங்கதன், சென்னை கிழக்கு.


Comments