இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க பேண்ட் வாத்தியார் கலைஞர்கள் வலியுறுத்தல்!!

      -MMH  


   இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வேண்ட் வாத்திய கலைஞர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.


  இது குறித்து பேண்ட் வாத்திய கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:


    கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


 


Comments