நவம்பர் 2 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! அரைநாள் மட்டுமே செயல்படும்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!

     -MMH


 கொரோனா வைரஸ் தொற்றைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வந்தது. 


 கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கலாம். அதேசமயம் கோவிட்-19 பரவலைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த நிலைமை கட்டுக்குள் இருந்தால் மட்டும் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தது. 


 இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு  இம்மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து மாநில அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது. இந்த சூழலில் இன்று மாநில அரசின் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 அதில், வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் கற்கலாம். அரை நாள் மட்டுமே கல்வி நிலையங்கள் செயல்படும். வாரம் முழுவதும் ஒருநாள் விட்டு ஒருநாள் பாடங்கள் நடத்தப்படும்.6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 முன்னதாக கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. ஆனால் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து முடிவை தள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments