25குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!!

     -MMH    


      கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்தார்.


      கொரோனா காலத்தில், குழந்தைகள் சிகிச்சையில் அசத்தும் அரசு மருத்துவர்கள்!


     கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவர்கள் வெங்கடேஷ், பூமா ஆகியோர் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குக் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள்:


     கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒருபுறம் நடந்து வந்தாலும் பிற சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் கடத்த ஒரு மாத்தில் மட்டும் பல்வேறு உடல் பாதிப்புகளுடனிருந்த 25 குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.அதேவேளைப் பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைகளும் காப்பாற்றப் பட்டுள்ளன. கொரோனா தொற்று காலத்தில் அதிகளவு குழந்தைகள் அறுவை சிகிச்சை கோவையில் நடந்துள்ளது.


      கொரோனா காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் குழந்தைகள் கல் போன்ற சிறிய பொருட்களை விழுங்கி விடுவது, சுடுதண்ணியை கை, கால்களில் ஊற்றிக்கொள்வது, மண்ணெண்ணெய்யை குடித்து விடுவது, ஆணியை மிதித்து புண்களை ஏற்படுத்துவது போன்ற பிரச்சினைகளோடுதான் குழந்தைகள் அதிகளவில் சிகிச்சைக்காக இந்த நேரத்தில் வந்தனர்.சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா தொற்று இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளையே நாடி வந்தனர்.


       குறிப்பாக கொரோனா தொற்று பரவலுக்குப்பின் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரொனாவிற்கு முன் 600 பிரசவங்கள் பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 950க்கு அதிகமான பிரசவங்கள் வரை பார்க்கப்படுகிறது.இந்த எண்ணிக்கையில் பிரசவம் பார்க்கப்படுவதால், பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


       பிறவியில் உறுப்பு ஊனம் ஏற்படுவது, உணவு குழாய் மற்றும் சுவாசக் குழாய் இணைந்து இருப்பது, மலதூவரம் இல்லாமல் இருப்பது, தொப்புள் மூலம் குடல் வெளியே வருவது, குடல் ஒரு பகுதி இல்லாமல் இருப்பது, குடல் வளராமல் இருப்பது என பல்வேறு பிரச்சினைகளுடன் பிறந்த குழந்தைகளில், இதுவரை 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் கைப்பற்றப்பட்டு ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments