பொள்ளாச்சியில் முத்துராமலிங்கதேவர் ஐயா குரு பூஜை..!!

   -MMH


முத்துராமலிங்கத் தேவர் .அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.


தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும்.


தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.



பசும்பொன் முத்துராமலிங்கத்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து துவக்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்து குறிப்பிடத்தக்கது.


பொள்ளாச்சியில் தேவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து 30.10.2020 . 113 வது ஜெயந்தி 58 வது குரு பூஜை நடைபெற்றது.


குருபூஜைக்கு 
பொள்ளாச்சி சட்டமன்ற துணை சபாநாயகர் மாண்புமிகு பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்கள்.
கோவை மத்திய கூட்டுறவு சங்க தலைவர் பொள்ளாச்சி திரு.கிருஷ்ணகுமார் அவர்கள்.
பொள்ளாச்சி நேதாஜி இளைஞர் பேரவை கவுரவ தலைவர் திரு.வெள்ளை நட்ராஜ் அவர்கள்.பத்திரிகையையாளர்கள் திரு ஜீவா.கவிஞர் பொள்ளாச்சி திரு. முருகானந்தம்  ஆகியோர் கலந்து கொண்டு தேவர் ஐயா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பொது மக்களும் கலந்து கொண்டு பூக்கள் இட்டு மரியாதை செய்தனர் .



நாளைய  வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments