கோவையில் திருநங்கை கொலைவழக்கு!! - இளைஞர் கைது!!

     -MMH 


     கோவையில் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யபட்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லை செய்த இளைஞரை காவல்நிலையத்தில் புகார் செய்து விடுவேன் என கூறியதால் ஆத்திரமுற்ற இளைஞர் திருநங்கை சங்கீதாவை கொலை செய்தததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 


     கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை சங்கீதா இவர் கடந்த புதன்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார் , இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். 



     இந்நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ராஜேஷ் என்பவரை சாயிபாபா காலனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . இது தொடர்பாக விசாரணை குறித்து  தகவல் தெரிவித்த காவல்துறையினர் நாகபட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் ஊட்க செய்திகளின் வாயிலாக சங்கீதாவின் டிரான்ஸ் கிச்சன் குறித்து அறிந்து கொண்டு வேலை வாய்ப்பு கோரியதாகவும் வேலைக்கு சேர்ந்த ராஜேஷ் ,சங்கீதாவுடனே அவர்து வீட்டில் தங்கியுள்ளான் .


     இந்நிலையில் சங்கீதாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட இளைஞர் ராஜேஷ் முயன்றுள்ளதாகவும் , இதனால் கோபமடைந்த சங்கீதா காவல்நிலையத்தில் புகாரளித்து விடுவேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்தரமுற்ற ராஜேஷ் சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கொலை நடந்த நாளன்று  மதியமே ஊருக்கு கிளம்புவதாக கூறிய ராஜேஷ் தண்ணீர் டிரம்பை வீட்டின் பின்புறப்பகுதிக்கு எடுத்து வைத்துள்ளான். திரு நங்கை கேள்வி எழுப்பவே அப்புறம் சொல்றேன் என கூறிவிட்டு ஊருக்கு கிளம்பியுள்ளான்.


     இந்நிலையில் மீண்டும் மாலை சங்கீதா வீட்டுக்கு வந்த ராஜேஷ் சங்கீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சங்கீதாவை தாக்கி கொலை செய்ததுடன் உடலை தண்ணீர் டிரம்பில் போட்டு விட்டு சென்றுள்ளான் . இந்நிலையில் புதன்கிழமை காலை துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இக்கொலை சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . ராஜேஷ் வாக்குமூலத்தின் படி ராஜேஷை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


-சீனி,போத்தனூர்.


Comments