நீண்ட நேரம் உட்காந்து வேலைசெய்தால்! இது போன்ற பாதிப்பா..!

        -MMH


     இன்றைய தொழில்நுட்ப காலத்திற்க்கு ஏற்றவாறு பல முன்னேற்றங்கள் மனித வாழ்வில் வந்துவிட்டன. இதன் விளைவாக நாம் பல நேரங்களில் உட்கார்ந்தே வேலை செய்கின்றோம்.வீட்டிலும் சரி வெளியிலும் சரி பெரும்பாலாக நாம் உட்கார்ந்தபடியே வேலைசெய்வது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.பைக்கில் செல்வது,வேலை செய்வது என பல விதமான வேளைகளில் நாம் உட்கார்ந்தே வேலை செய்கின்றோம்.


     உண்மையில் உட்கார்ந்தே வேலை செய்வதனால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.



     ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலைய செய்கிறது.


     நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹார்மோன் சமநிலையை கெடுக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதே முறை நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில் உங்களுக்கு கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.


     உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் உடல்நல அபாயத்தில், பெருங்குடல் புற்றுநோயும் ஒன்று. அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது.
நாற்காலியில் 6-7 மணிநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் இடுப்பு எலும்பை வலுவிழக்க செய்கிறது.


     உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு சிறிய அளவு தொந்தி ஏற்பட்டாலும் தொந்தி தொங்க ஆரம்பித்துவிடும். இதற்கு காரணம் உடல் உழைப்பின்றி வேலை செய்வது தான். உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் உடல் அமைப்பை மாற்றிவிடுகிறது.


     கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


     உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் மூளை செயல்திறனை மங்கிப்போக செய்கிறது. இது உங்கள் கவனத்தை குறைத்து, மூளையை துல்லையமற்று செயல்பட செய்கிறது.


     ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென கழுத்தை திருப்ப கூட முடியாத அளவு கடினமான வலி ஏற்படும். இதனால் Spondylosis எனப்படும் குணப்படுத்த முடியாத பாதிப்பு ஏற்படலாம்.


     மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு இந்த தண்டுவட வலி தான். இது தண்டுவட டிஸ்க் எலும்புகளை வலுவிழக்க செய்கிறது.


     கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு, கையை அசைக்காமல் ஒரே நிலையில், தட்டச்சுப் பலகையுடன் உறவாடும் போது இதுப் போன்ற தோள்ப்பட்டை வலி அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments