அல்சர் குணமாக இதை செய்து பாருங்கள்..!

      -MMH


மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும்.


 பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.
பாகற்காயை விட சிறந்தது வேற எதுவும் இல்லை. அதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து உடல் பலம் பெறும்.


  மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும் வாகை மர பிசினை பொடி செய்து, பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் ஆறும்.


  கஞ்சியை வயிற்றுப்புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும். துளசி இலைச் சாறில் மாசிக்காயை சேர்த்து நன்கு இடித்து, அந்த விழுதை சாப்பிட்டு வரவும்.


  சீந்தில்கொடி, சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சவும். அந்த சாரை வகைக்கு 50 மில்லி எடுத்து, அதில் 35 கிராம் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் பத்திரப்படுத்தவும்.


  அதனை ஒரு கிராம் அளவு எடுத்து ஒரு வேளை சாப்பிட்டு வர எல்லாவிதமான வயிற்றுவலி, அல்சர் மற்றும் குன்மம் குணமாகும்.அதனுடன் சமஅளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டு கூட்டி 100 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments