வட கிழக்கு பருவ மழை துடங்கியது!!-பொள்ளாச்சி விவசாயிகள் மகிழ்ச்சி!!
-MMH
பொள்ளாச்சியில் லேசான மழை!!
தமிழ்நாட்டில் தென்மேற்க்கு பருவமழை பெய்து ஓய்வடைத்த நிலையில் ,வெயிலின் தாக்கம் சற்று இருந்தாலும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் திருமூர்த்தி அணையில் இருந்து பாசன வசதிக்காக ஆண்டு தோறும் இரு முறை திறக்கப்படும் கால்வாய் நீர் பொள்ளாச்சி விவாசகிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியில்,தற்போது பருவ மழையும் பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயம் செய்ய பூமிக்கு அதிக குளிர்ச்சி கிடைத்து ,நிலம் உழவதற்கு ஏற்றால் போல் இருக்கும்,என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments