கோவை நஞ்சப்பா சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு - வாகன ஓட்டிகள் அவதி..!!

    -MMH


     கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்தது.


     கோவை நஞ்சப்பா சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்து அதிகப்படியான நீர் வெளியேறியது. வெளியேறிய நீரானது அவினாசி மேம்பாலம் அடியில் புகுந்ததால் மேம்பாலத்திற்கு அடியில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்து காணப்பட்டது.இதனால் வாகனங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


     இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர். சுமார் மூன்று மணி நேரம் நீர் வெளியேறியது.


     மாநகராட்சி ஊழியர்கள் உடைந்த குடிநீர் குழாயினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேம்பாலத்திற்கு அடியில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்து காணப்பட்டது. வெள்ளம் போல் நீர் சூழ்ந்த மேம்பாலம் மேலும் அவினாசி மேம்பாலத்திற்கு கீழ் தேங்கிய நீரை பம்ப்செட் மூலம் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வேலைக்கு செல்லும் பணியாளர்கள் இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments