தமிழக – கேரளா எல்லையில் பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல்! ஆட்டோவில் வந்த 3பேர் கைது!!

     -MMH 



      தமிழக – கேரளா எல்லையில் பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல்: ஆட்டோவில் வந்த 3 கைது!!
    தமிழகத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து  நேற்று பிற்பகல் தமிழக எல்லையை அடுத்த வாளையாறு பகுதியில் கேரள மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தமிழகம் பதிவெண் கொண்ட ஆட்டோ வந்தபோது அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரை பிடித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து கோவை வழியாக ஆட்டோ ரோடு மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது.


இதனையடுத்து ஆட்டோவில் வந்த தேனியை சேர்ந்த ஜெயசீலன், காதர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கேசவன் ஆகிய 3 பேரை வாளையார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சில்லறை மதிப்பு 63 லட்ச ரூபாய் இருக்கும் எனவும், தேனி , கம்பம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை, ஈரோட்டில் வைத்து பேக்கிங் செய்து கேரளாவிற்குள் கொண்டு வந்து இருப்பதும் வாளையார் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரிடமும் வாளையார் போலீசார் ( கேரளா) விசாரணை நடத்தி வருகின்றனர்.


-சீனி,போத்தனூர்.


Comments