நிவர் புயலின் முன்னெச்சரிக்கையாக! - 7 மாவட்டங்களுக்கு நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது..!

 

-MMH

நிவர் புயலின் முன்னெச்சரிக்கையாக, 7 மாவட்டங்களுக்கு நாளை மதியம் ஒரு மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. அடுத்து அறிவிப்பு வரும் வரை தமிழக முதல்வர் உயர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாரூர் நாகப்பட்டினம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு பேருந்துகள் நிறுத்தப்படுகிறது.

பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்: உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சி மாநகராட்சி அனைத்து அரசு துறைகளும் நீர் மேல் தொட்டிகள் அனைத்தையும் முழுவதுமாக நீர் ஏற்றி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி செயல்படும் விதமாக வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது.

-வினோத்குமார் கும்பகோணம்.

Comments