கோவையில் பரபரப்பு!! - ஐம்பொன் சிலைகள் விற்க முயன்ற நபர்கள் கைது!!

     -MMH


     கோவையில் ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது - 53 கிலோ எடைக்கொண்ட பழங்கால சிலைகள் பறிமுதல் செய்து போலிசார் விசாரணை!


கோவையில் தெலுங்கு வீதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐம்பொன் சிலையின் ஒரு பகுதி மீட்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு 53 கிலோ ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.



கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் இருந்த போலிசாரை பார்த்து ஜெயசந்திரன் மற்றும் பாலவெங்கடேஷ் இருவர் ஒடியதை அடுத்து போலிசாருக்கு சந்தேகம் எழுந்தது, இதை தொடர்ந்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் 200கிராம் எடைக்கொண்ட ஐம்பொன் சிலையின் சிறிய பாகத்தை வைத்திருந்ததும், அதை விற்பனை செய்ய முயன்று வந்தது தெரியவந்துள்ளது.



மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, அருண், தீனதயாளன் ஆகியோர் 53 கிலோ எடையுள்ள 2 ஐம்பொன் சிலைகள் தோட்டத்தில் வைத்து விற்பனை செய்ய முயற்சித்து வந்ததாகவும் அதன் ஒரு சிறிய பகுதியை ஜெயசந்திரன் மற்றும் பால வெங்கடேஷ் ஆகியோர் மூலம் விற்பனை செய்ய முயன்றபோது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.



மேலும் அருண் சிறையில் இருந்தபோது இந்த தகவலை சேகரித்துவிட்டு வெளியே வந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்து சிலைகளை விற்க முயற்சித்து வந்துள்ளனர். இதை அறிந்த வெரைட்டிஹால் ரோடு போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடவுளர் சிலைகள் அல்ல என்பதும், பழங்கால மன்னர்கள் சிலையாக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


-சீனி,போத்தனூர்.


Comments