கிருங்கோட்டையில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்டக் கவுன்சிலர் சந்திப்பு!!


  -MMH
     சிங்கம்புணரி: சிவகங்கை புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள P.மதுசூதன் ரெட்டியை சிங்கம்புணரி வட்டம், கிருங்காகோட்டையில் சிவகங்கை மாவட்ட 1 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பொன்.மணி.பாஸ்கர் சந்தித்தார். 

அப்போது முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் வைத்த கோரிக்கையான, கிருங்காகோட்டையில் 120 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஆவணம் செய்வதாக உறுதி அளித்தார். மேலும் எஸ்.புதூர் ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேவைகள் பற்றி கோரிக்கை வைத்தார். உடனே அனைத்து தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

-ஃபாரூக்,சிவகங்கை.

Comments