பழனி துப்பாக்கிச்சூடு – குடலில் குண்டு பாய்ந்தவர் பலி!!

 -MMH

     பழனியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சுப்பிரமணி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலப் பிரச்சனை காரணமாக தொழிலதிபர் நடராஜன் என்பவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்பிரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை சுட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியனின் உடலிலிருந்து சுமார் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோட்டா அகற்றப்பட்டது. தோட்டா குடல் பகுதியில் ஏற்படுத்திய பெரும் காயத்தினால் முன்னதாகவே ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக அதிகளவில் ஏற்பட்ட ரத்தப்போக்கினால் சிகிச்சை அளிப்பதில் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

-ஃபாரூக்,சிவகங்கை.

Comments