பாஜக மாவட்டத் தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!!

 

-MMH

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது அதே மாவட்டத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக பணிபுரியும் காயத்ரி பாலியல் புகார் அளித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மகளிரணி பொதுச்செயலாளரான காயத்திரியிடம் கலியவரதன் பலமுறை பாலியல் தொல்லை மற்றும் பணமோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த காயத்ரி, பாஜக மாநில தலைமையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் மாநிலத்தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் கலியவரதன் மீது புகார் அளித்து, பாஜக தலைமைக்கு காய்த்திரி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் கடிதத்தில், “நான் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ளேன். உன்னை கட்சியில் பெரிய ஆளாக ஆக்குகிறேன் என்று கலியவரதன் என்னிடம் நயவஞ்சகமாக பேசி சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே யாரிடமாவது கூறினால் ‘’உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன் ‘’ என்று கொலை மிரட்டலும் விடுத்தார்.

என்னைப் போன்று பல பெண்களின் வாழ்க்கையில் அவர் விளையாடுகிறார். எனவே, அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

-பாரூக் சிவகங்கை.

Comments